மொஹி கு 2 வயது இருக்கும் ,அப்போ ஒரு நாள் அவ தொலைகாட்சி பெட்டிய ஏதோ நோண்டிட்டு இருந்தா,நான் அதை பார்த்து இப்படி பண்ணா TV repair ஆயிடும் அப்படீன்னு சொன்னேன்
பிறகு ஒரு நாள் சில மாதங்களுக்கு பிறகு மொட்டை அடித்து காது குத்தி விட்டோம் .கம்மல் போட்டதிலிருந்து காத நோன்டிடே இருந்தா ,
இப்படி பண்ணா காது repair ஆயிடும் அப்படி சொன்னேன் .உடனே யோசிக்காமல் என்ன காது என்னTV யா repair ஆகறதுக்கு என்றாள்.
ஒரு நாள் எங்க பக்கத்துக்கு வீட்டுக்கு போயிருந்தேன் .அவங்க மட்டும் தான் எங்க ஏரியா ல தமிழ் .அவங்க வயதான தாத்தா, பாட்டி.அவங்க பசங்க எல்லாரும் வெளி நாட்டில் வசிபவர்கள் .மொஹி அவங்க வீட்டில் பண்ண கலாட்டா இருக்கே .... அவங்களுக்கு கோபமே வரவில்லை .ஆச்சர்யம் .பாட்டி ரொம்ப perfect and clean .சின்ன சின்ன செடி100 இருக்கும் .இரண்டு பேருக்கும் அவ்வளவு gardening la interest.பெரிய வீடு தனிமையே துணை .மொஹி பண்ணற கலாட்டாவுக்கு அவன் ஏதும் சொலவேயில்லை மாறாக எங்கள் பேரன் பேதி இங்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு அவங்க வந்தாலும் இப்படி தான் வீட்டில் ஒரு பொம்மை ஒழுங்கா இருகாது,செடில ஒரு இலை இருக்காது .சொல்லும்போதே ஏக்கம் ஆனால் வருத்தம் அவர்களிடம் இல்லை . they prepared themselves for living alone.இளமையில் வறுமை முதுமையில் தனிமை கொடுமை இல்லையா ?
இப்ப பசங்க நிறைய விசியங்களை மிஸ் பண்ணறாங்க .குட்டீஸ் எல்லாம் இப்போ அதிகம் விளையாடுவது தனியாத்தான் .
Town bus la, இப்போ பயணம் பண்ண குழந்தைகளை நாம் விடுவதில்லை .அக்கம் பக்கம் பசங்க சேர்ந்து விளையாடுவதில்லை .நாங்க school போன பொழுது பட்டம் ,கண்ணா பூச்சு ,நொண்டி ,சொப்பு,விளையாடுவோம் .நிறைய விளையாட்டு கொஞ்சம் சண்டை பயங்கர சந்தோஷமா இருந்தது .இப்போ ,பசங்க school விட்டா வீடு .அதுக்கு காரணம் பெற்றோரின் பயம் .பசங்களுக்கு இடையில் உள்ள போட்டி .